ஏறு சிங்கி இறங்கு சிங்கி என கேள்விபட்டுள்ளீர்களா? இறங்கு சிங்கிடை பற்றி வேண்டாம். நல்லவைகள் மற்றும் தரும் பணம் வர மூலிகை ஏறு சிங்கியை பற்றி பார்ப்போம். இருக்கும் இடத்தை ஏற்றம் மிக்கதாக மாற்றும் மூலிகை இது என்பர். உதாரணமாக பணத்தடை விலக,பணம் வர, வேலையில் தொழில் உயர் பதவி. உயர்நிலை அடைய, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய இந்த ஏறு சிங்கியை வீட்டில் வைப்பது நன்று. முற்கள் ஏறு முகமாக இருக்கும் மூலிகை மரம் என்பதால் ஏறு சிங்கி என பெயர் வந்ததாகவும் ஒரு வழக்கு உண்டு இதை மிருகபட்சம் எனவும் கூறுவார் கடவுள் முருகனுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் போரில் வெற்றியை கொடுத்ததாக இந்த மூலிகை மரத்திற்கு ஏற்றம் தரும் ஏறு சிங்கி என நற்பெயர் உண்டு. மிகவும் அரிதான இந்த த மூலிகையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், சுவாமி பூஜை அறையில் வைக்க அனைத்து வித நலன்களையும் எதிர்பார்க்கலாம் என்பது சித்தர் வாக்கு என்பர் இங்கே. ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் சித்தர்கள் வாழ்ந்த காலம், அப்போது இருந்த மக்கள் வாழ்ந்த காலம், இட சூழ்நிலைகள், மக்களுக்கு இருந்த நல்ல மனப்பான்மை, தெய்வநம்பிக்கை போன்றவை இப்பொழுது கலிகாலத்தில் மிக குறைவு. பூஜையறையில் வைக்கும் முன் கங்கை நீர், சுத்தமான பன்னீர், மஞ்சள் நீர் போன்றவை மூலம் பக்திடன் கழுவி (ஊரபோட்டுவிட கூடாது) காய வைத்து வைக்க வேண்டும். பின்னர் செல்வத்தை வசீகரிக்கும் சக்தியை கொண்ட ஏறு சிங்கியை மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.